பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழ் படங்களிலும், ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் தயாரிப்பாளர், கோல்டி பெல்லை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்த சோனாலி, கடந்த ஜூலை மாதம், தான் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் சோனாலி. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பி உள்ளார் சோனாலி.
இதுப்பற்றி சோனாலியின் கணவர் கோல்டி கூறுகையில், சோனாலி பிந்த்ரே உடல்நலம் தேறி வருகிறார். மீண்டும் நோய் தாக்கினால் அதற்கு ஏற்றபடி சிகிச்சை மேற்கொள்ளப்படும். சோனாலி திடமான பெண். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என்றார்.