மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்திய அழகி பட்டத்தை பெறுவதற்காக, நடிகை தனுஸ்ரீ தத்தா, முறைகேடான செயலில் ஈடுபட்டதாக, நடிகை ராக்கி சாவந்த், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர், நானா படேகர் மீது, முன்னாள் இந்திய அழகியும், பாலிவுட் நடிகையுமான, தனுஸ்ரீ தத்தா, 34, சமீபத்தில், பாலியல் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பாலியல் குற்றச்சாட்டின் போது, நானா படேகருக்கு ஆதரவாக, மற்றொரு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், 39, செயல்பட்டார்.
இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தனுஸ்ரீ பற்றி, ராக்கி சாவந்த் கூறியதாவது: தனுஸ்ரீ தத்தா, 10 ஆண்டுகளுக்கு முன், என்னுடன் ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்தார்; அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ, ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.