‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்க முயற்சி செய்யும் டெரர் போலீஸ் கான்ஸ்டபிள் சகாதேவனாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் கலாபவன் சாஜன். தற்போது, ரஜினி - அக்சய் இணைந்து நடித்துள்ள '2.O' படத்தில் முக்கிய வேடத்தில் இவரை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர். குறிப்பாக இந்தப்படத்தில், அக்சய் குமாருடன் இணைந்து சில காட்சிகளில் நடித்துள்ளார் கலாபவன் சாஜன்.
படப்பிடிப்பு சமயத்தில் அக்சய் உடன் சேர்ந்து செல்பி எடுக்க விரும்பினார் கலாபவன் சாஜன். ஆனால் அக்சய் மேக்கப் போட்டிருந்தபடியால் சாஜனின் ஆசையை உடனே நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்து மேக்கப்பை கலைத்ததும், உடனே ஞாபகமாக சாஜனை தானே அழைத்து செல்பி எடுத்துக்கொண்டாராம் அக்சய். அவரது பெருந்தன்மை கலாபவன் சாஜனை நெகிழ வைத்து விட்டதாம்.