'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்க முயற்சி செய்யும் டெரர் போலீஸ் கான்ஸ்டபிள் சகாதேவனாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் கலாபவன் சாஜன். தற்போது, ரஜினி - அக்சய் இணைந்து நடித்துள்ள '2.O' படத்தில் முக்கிய வேடத்தில் இவரை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர். குறிப்பாக இந்தப்படத்தில், அக்சய் குமாருடன் இணைந்து சில காட்சிகளில் நடித்துள்ளார் கலாபவன் சாஜன்.
படப்பிடிப்பு சமயத்தில் அக்சய் உடன் சேர்ந்து செல்பி எடுக்க விரும்பினார் கலாபவன் சாஜன். ஆனால் அக்சய் மேக்கப் போட்டிருந்தபடியால் சாஜனின் ஆசையை உடனே நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்து மேக்கப்பை கலைத்ததும், உடனே ஞாபகமாக சாஜனை தானே அழைத்து செல்பி எடுத்துக்கொண்டாராம் அக்சய். அவரது பெருந்தன்மை கலாபவன் சாஜனை நெகிழ வைத்து விட்டதாம்.