தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்க முயற்சி செய்யும் டெரர் போலீஸ் கான்ஸ்டபிள் சகாதேவனாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் கலாபவன் சாஜன். தற்போது, ரஜினி - அக்சய் இணைந்து நடித்துள்ள '2.O' படத்தில் முக்கிய வேடத்தில் இவரை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர். குறிப்பாக இந்தப்படத்தில், அக்சய் குமாருடன் இணைந்து சில காட்சிகளில் நடித்துள்ளார் கலாபவன் சாஜன்.
படப்பிடிப்பு சமயத்தில் அக்சய் உடன் சேர்ந்து செல்பி எடுக்க விரும்பினார் கலாபவன் சாஜன். ஆனால் அக்சய் மேக்கப் போட்டிருந்தபடியால் சாஜனின் ஆசையை உடனே நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்து மேக்கப்பை கலைத்ததும், உடனே ஞாபகமாக சாஜனை தானே அழைத்து செல்பி எடுத்துக்கொண்டாராம் அக்சய். அவரது பெருந்தன்மை கலாபவன் சாஜனை நெகிழ வைத்து விட்டதாம்.