மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோரின் திருமணம் அடுத்த மாதம் நவம்பர் 10ம் தேதி இத்தாலி நாட்டில் உள்ள லேக் கோமோ என்ற இடத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்து முறைப்படி நடக்க உள்ள திருமண சடங்குகள் மட்டும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாம்.
திருமணத்திற்கு இருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள். அவர்கள் யாரையும் செல்போனைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள உள்ளார்களாம்.
லேக் கோமோ ஒரு அழகான இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. அங்கு மிகப் பிரம்மாண்டமான வில்லாக்கள் உள்ளன. அவற்றில்தான் தனிப்பட்ட விதத்தில், மிகவும் பாதுகாப்புடன் ரன்வீர், தீபிகா திருமணம் நடைபெற உள்ளது என்கிறார்கள்.
ஏற்கெனவே, ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோரது திருமணம் இத்தாலியில் உள்ள போர்கோ பினோச்சிட்டோ என்ற இடத்தில் நடைபெற்றது.
ஹிந்தி பிரபலங்கள் தற்போது அவர்களது திருமணங்களை வெளிநாடுகளில் நடத்துவதுதான் பேஷனாகிவிட்டது.