'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலக நாடுகளை நடுங்க வைத்த மீ டூ இயக்கம் இப்போது இந்தியாவிலும் பரபரப்பு கிளப்பி வருகிறது. மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், நடிகர் நானே படேகர், பாடலாசிரியர் வைரமுத்து என முன்னணி பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை கேட் சர்மா பிரபல பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கேட் சர்மா டுவிட்டரில் குற்றச்சாட்டை கூறிவிட்டு ஒதுங்கி விடாமல் மும்பை வெரிசோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் 6ந் தேதி பட வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர் சுபாஷ் கய் என்னை அவர் வீட்டுக்கு அழைத்தார். அவர் மீது உள்ள மதிப்பு, நம்பிக்கையின் அடிப்படையில் அவர் வீட்டுக்கு சென்றேன்.
வீட்டின் தனி அறைக்குள் அழைத்துச் சென்று என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். எனக்கு ஒத்துழைக்காவிட்டால் எந்த படத்திலும் நடிக்கவிட மாட்டேன் என்று மிரட்டினார். நான் அவரிடமிருந்து தப்பி வந்து விட்டேன். அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டை சுபாஷ் கய் மறுத்துள்ளார்.