ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலியல் குற்றச்சாட்டுகளால் பாலிவுட் சினிமா கலகலத்து கிடக்கிறது. தினசரி ஒரு பிரபலத்தின் மீது பாலியல் புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதனாலேயே தான் நடிக்கவுள்ள 'ஹவுஸ்புல்-4' படத்தின் படப்பிடிப்பை நிறுத்தசொல்லி தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார் அக்சய் குமார்.
காரணம் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நானா படேகரின் மீது ஏற்கனவே நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தற்போது படத்தின் இயக்குனர் சாஜித்கான் மீதும் நடிகைகள் சலோனி சோப்ரா, ரேச்சல் ஒயிட் உள்ளிட்ட சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம்தான் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அக்சய் குமார், இதனால் டென்சனாகி 'ஹவுஸ்புல்-4' படப்பிடிப்பை தற்போது துவங்கவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை தெளிவானபின் படப்பிடிப்பை துவங்கலாம் என்றும் பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளானவர்களுடன் நான் நடிக்கமாட்டேன் என்றும் கூறி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நானா படேகரும், சாஜித் கானும் இந்தப்படத்திலிருந்து விலகியுள்ளார்களாம்.