ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகைகள் தங்களது கடந்த காலத்தில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த கசப்பான நிகழ்வுகளை மீ ட்டூ (Me Too) என்கிற பிரசாரத்தின் மூலமாக, தற்போது பகிர்ந்துகொண்டு வருகின்றனர். விஜயகாந்தின் கஜேந்திரா, கார்த்திக்-பிரபு நடித்த குஸ்தி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை புளோராவும் பாலிவுட் பட தயாரிப்பாளர் கௌரங் தோஷி மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு புளோராவும் கௌரங் தோஷியும் நட்பாக வாழ்ந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது இதுபற்றி புளோரா குற்றம் சாட்டினாலும் ஒரே ஒருவரை தவிர வேறு யாரும் இவரின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்கவில்லையாம். அந்த ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
அப்போது கௌரங் தோஷி தயாரிப்பில் இந்தியில் நடிக்க ஒப்பந்தாமாகி இருந்த ஐஸ்வர்யா, பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒருவரின் படத்தில் நடிக்கமாட்டேன் என கூறி அந்தப்படத்தில் இருந்தே வெளியேறிவிட்டாராம். ஒரு சாதாரண நடிகையான தனக்கு ஆதரவாக அவ்வளவு பெரிய நடிகை இப்படி ஒரு முடிவை எடுத்தது, அவர் மீதான மதிப்பை அதிகரிக்க வைத்தது என கூறியுள்ளார் புளோரா.