இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டில், தீபிகா படுகோனே, தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகிறார். ஆனால், அவரது காதல் வாழ்க்கை, அந்த அளவுக்கு வெற்றிகரமாக இல்லை.
நடிக்க வருவதற்கு முன், தன்னுடன் சேர்ந்து, மாடலிங்கில் ஈடுபட்ட, நிகார் பாண்டே என்ற
இளைஞரை காதலித்தார். 'பிசி'யான நடிகையானதும், நிகாரை கழற்றி விட்டார். பின், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் சில நாட்கள், ஜாலியாக வலம் வந்தார்.அதற்கு பின், விஜய் மல்லையாவின் மகன், சித்தார்த் மல்லையா, பிரபல நடிகர், ரன்பீர் கபூர் ஆகியோருடன் நெருக்கமாக பழகினார். ஆனால், எதுவுமே கை கூடவில்லை.
தற்போது, நடிகர், ரன்வீர் சிங்கை உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார், தீபிகா. நவம்பரில், இவர்களது திருமணம் நடக்கலாம் என்கிறது, பாலிவுட் வட்டாரங்கள்.