தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். குயின் படத்தில் சிறப்பாக நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது குயின் பட இயக்குனர் விகாஸ் பாகல் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு பாம்பே வெல்வெட் திரைப்படத்தின் விளம்பர சுற்றுலா சென்றபோது தன்னிடம் பாலியல் தொல்லையில் விகாஸ் ஈடுபட்டார் என்று ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண்ணுக்கு ஆதரவாக இப்போது கங்கனா கருத்து கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
அந்த பெண்ணை முழுவதும் நான் நம்புகிறேன். கடந்த 2014ம் ஆண்டு விகாசுக்கு திருமணம் நடந்திருந்தபொழுதும், குயின் படப்பிடிப்பு நடந்தபொழுது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நபருடன் பாலியல் உறவில் ஈடுபடுவார். ஒவ்வொரு இரவும் விருந்து நடக்கும். நான் படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுக்க செல்வேன். ஆனால் என்னை தூங்க விடாமல் அவர் அவமானப்படுத்தினார்.
படப்பிடிப்பில் ஒவ்வொரு முறை சந்திக்கும்பொழுது, இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்வோம். இது பொதுவான ஒன்றுதான், ஆனால் அதிலும் அவர் எல்லை மீறுகிறார். எனது கழுத்தில் அவரது முகத்தினை புதைத்து கொள்வார். இறுக அணைத்துக் கொள்வார். பின்னர் எனது தலைமுடியை தடவிக்கொடுத்து முகர்ந்து பார்ப்பார். அவரிடம் இருந்து என்னை விடுவித்து கொள்ள அதிக வலிமையுடன் நான் போராட வேண்டியிருந்தது. விகாஸ் சரியான நபர் இல்லை.