டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி அதன் மூலம் கடந்த சில மாதங்களாக சர்ச்சை ராணியாக வலம் வருபவர் தான் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது இவரது குற்றச்சாட்டு பாலிவுட் சூப்பர் நடிகர்கள் பக்கம் திரும்பியுள்ளது.. ஆனால் வேறு விஷயத்தில்.
ஆம் கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் புகைந்து கொண்டிருக்கும் நடிகை தனுஸ்ரீ தத்தா - நானா படேகர் விஷயத்தில் அமிதாப் பச்சன், ஆமீர்கான் இருவரும் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளன. கூடவே ஸ்ரீரெட்டியின் கோபத்தையும் கிளறிவிட்டுள்ளன.
இதுபற்றி டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, “ஆமீர்கானிடம் இருந்து இதுபோன்ற பதிலை எதிர்பார்க்கவில்லை.. உண்மையான வாழ்க்கையில் நடிப்பதை நிறுத்துங்கள் ஜி. அதேபோல அமிதாப் ஜி, இதுபோன்ற பெண்களில் உங்கள் பேத்தியின் உருவத்தை உங்களால் பார்க்க முடியவில்லையா..? பெண்களை மதிக்க முடியாவிட்டால் உங்களுக்கு எந்த இந்திய தயாரிப்பையும் விளம்பரப்படுத்தும் தகுதி இல்லை. தனுஸ்ரீ விவகாரத்தில் நீங்கள் நடந்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.