தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன். அதனால் இவர் படப்பிடிப்பிற்காக செல்லும் இடங்களுக்கு தானே சொந்தமாக பாதுகாவலர்களை அழைத்து செல்கிறார். அப்படி சமீபத்தில் ஆமதாபாத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டு மும்பை திரும்புவதற்காக ஆமதாபாத் விமான நிலையம் வந்த சன்னி லியோனுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது விமான நிலையத்தில் க்யூவில் நின்று ரசிகர்களின் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்காக தன்னையும் தனது பாதுகாவலர்களையும் உள்ளே அனுமதிக்குமாறு சன்னி லியோன் கேட்டுள்ளார். ஆனால், அவரையும் அவரது உடைமைகளையும் மட்டுமே அனுமதித்த அதிகாரிகள், அவரது பாதுகாவலர்களை அப்படி அனுமதிக்க மறுத்து வரிசையில் வரச்சொல்லி விட்டனர்.
இதனால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சன்னி லியோன். இதையடுத்து அவருடன் ஒரே ஒரு பாதுகாவலரை மட்டும் செல்ல அனுமதித்தனர். இதுகுறித்து டுவிட்டரில் பகிர்ந்துள்ள சன்னி லியோன், "விமான நிலைய அதிகாரிங்கள் எனக்கு உதவுவார்கள் என நினைத்தது என் தவறு தான்" என நொந்துபோய் கூறியுள்ளார்.