இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் விஜய் ரத்னாகர் குதே. இவர், 'விஆர்ஜி டிஜிட்டல் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
'பத்மாஷியான்' மற்றும் 'எமோஷனல் அத்யாச்சார்' போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கேர் நடிக்கிறார்.
இந்தப்படத்தின் தயாரிப்பு செலவு என மோசடி பில்களை தாக்கல் செய்து விஜய் ரத்னாகர், ரூ.34 கோடி வரையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று இயக்குனர் விஜய் ரத்னாகர் கைது செய்யப்பட்டார்.