தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் படங்களில் நடித்தவர் ஹிந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், இயக்குநரும் தயாரிப்பாளருமான கோல்டி பெஹல்லை 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்தவர், அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். தற்போது 43 வயதை எட்டியிருக்கும் சோனாலி பிந்த்ரேவுக்கு தீவிர புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு புற்றுநோய் இருப்பதை டுவிட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார் சோனாலி.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது... வாழ்க்கையில் சில நேரங்களில் எதிர்பாராதது திடீரென நடந்துவிடும். எனக்கு தீவிர புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் திடீரென வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தேன். அப்போது தான் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த நோயில் இருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு பக்கபலமாக எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளனர்.
இவ்வாறு சோனாலி பிந்த்ரே பதிவிட்டிருக்கிறார்.