ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியாவின் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் 3 இடியட்ஸ் நாவலை அதே தலைப்பில் 2009ம் ஆண்டு படமாக இயக்கி வெளியிட்டார் ராஜ்குமார் இராணி. அமீர்கான், மாதவன், ஷர்மன் ஜோஷி நடித்த இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. இதே படம் நண்பன் என்ற பெயரில் தமிழில் வெளியானது. விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடித்திருந்தனர். ஆனால் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் ராஜ்குமார் இராணி. இது சேத்தன் பகத்தின் கதை அல்ல. ராஜ்குமார் இராணியின் சொந்த கதை. 3 இடியட்ஸ் படத்தில் கல்லூரியில் படித்த நண்பர்கள் இப்போது தாங்கள் இருக்கும் துறையில் என்ன சந்தித்தார்கள், சாதித்தார்கள் என்பது இரண்டாம் பாகத்தின் கதையாம்.
'நான் நிச்சயம் 3 இடியட்ஸ் படத்தின் தொடர்ச்சியை இயக்க உள்ளேன். அதற்கான கதை எழுதும் பணியைச் சில நாள்களுக்கு முன்னர்தான் தொடங்கினேன். இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடிக்க கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்” எனக் கூறியுள்ளார். ராஜ்குமார் இராணி. இவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்துள்ளள சஞ்சு பெரிய வெற்றி பெற்றிருப்பதால் இப்போது 3 இடியட்சிஸ் இரண்டாம் பாகத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.