ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹாலிவுட்டில் மிகவும், 'பிசி'யான நடிகையாகி விட்டார், பிரியங்கா சோப்ரா. அங்குள்ள முன்னணி நடிகையருக்கு சவால் விடும் வகையில், அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. இதனால், சில ஆண்டுகளாக, ஹிந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தவிர்க்க முடியாத வாய்ப்பை மட்டுமே அவர், ஒப்புக் கொண்டார்.
'இப்படியே போனால், பாலிவுட் ரசிகர்கள் உங்களை மறந்து விடுவர்' என, பாலிவுட் பிரபலங்கள், பிரியங்காவுக்கு அறிவுரை கூறியதை அடுத்து, அவரது மனது மாறியுள்ளது. விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
'இந்த படத்துக்கு, பெரிய ஹீரோக்களை ஒப்பந்தம் செய்ய வேண்டாம். கதையும், அதில் என் கேரக்டரும் தான் முக்கியம். ஆண்டுக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடித்தாலும், அது, என் பெயரைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு கதையை தயார் செய்யுங்கள்' என, இயக்குனரிடம் கூறியுள்ளார், பிரியங்கா. இதையடுத்து, வித்தியாசமான கதையை தயார் செய்யும் பணியில், முழுவீச்சில் இறங்கியுள்ளார், இயக்குனர் விஷால் பரத்வாஜ்.