பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர். பாகியா என்ற படத்தில் அறிமுகமாகி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குடும்பத்தால் அநாதையாக விடப்பட்ட கீதா கபூர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சைக்கு பணம் செலுத்தக்கூட யாரும் வரவில்லை. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த ஒரு சிலரின் உதவியால் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்ததும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடடியாக அவர் கோரேகாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்து, 100 படங்களுக்கு மேல் நடித்த கீதா கபூர் யாருமற்ற அநாதையாக மரணித்தார்.