தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரான்ஸில் கடந்த 8ந் தேதி கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. வருகிற 19ந் தேதி நிறைவடைகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழ் நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யாராய், ஹூமா குரேஷி, தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத், சோனம் கபூர், மல்லிகா ஷெராத் உள்பட பலர் கலந்து கொண்டு வருகிறார்கள்.
நேற்று மல்லிகா ஷெராவத் பட விழா நடக்கும் வளாகத்திற்குள் 12 அடி உயரமும், 8 அடி நீளமும் கொண்ட ஒரு இரும்பு கூண்டுக்குள் 12 மணிநேரம் தன்னை தானே அடைத்துக் கொண்டு திடீர் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார். பெண்களின் சுதந்திரத்திற்காகவும், குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை எதிர்த்தும் அவர் இந்த போராட்டத்தை நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கேன்ஸ் திரைப்பட விழாவில் இது என்னுடைய 9-வது ஆண்டு. இந்த விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் சென்று சேரும். இப்படி என்னை ஒரு சிறிய கூண்டுக்குள் அடைத்துக் கொள்வதால், சிறு பிள்ளைகள் வன்முறையின் காரணமாக எப்படிப்பட்ட கொடூர வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடிகிறது.
இது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு பெண்களும், குழந்தைகளும் பலியாக்கப்படுகிறார்கள். அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்" என்று கூறினார்.
மல்லிகா ஷெராவத் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக பல அமைப்புகள் நடத்தி வருவதும், தொடர்ந்து போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.