'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பிரபல இந்தி நடிகை மற்றும் மாடல் அழகி மீனாட்சி தபா. இவர் கடந்த 2012ம் ஆண்டு அவரது நண்பர்களாலேயே கடத்தி செல்லப்பட்டு அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டப்பட்டார். பணத்தை கொடுக்காததால் மீனாட்சி தபாவை படுகொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசினர். தவறான சகவாசத்தால் மீனாட்சிக்கு இந்த முடிவு ஏற்பட்டது.
இது தொடர்பாக மீனாட்சியின் நண்பர்கள் அமித்குமார், அவரது காதலி பிரீத்தி சுரின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி மீனாட்சியை அலகாபாத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்பு கூலிப்படையை வைத்து அவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதையும் படுகொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். கடந்த 6 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.