டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சோஷியல் மீடியாவில் நாள் தவறாமல் தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்த கருத்துக்களும், தனது படங்கள் குறித்த புரமோஷன் செய்திகளும் அதில் அடங்கும். அப்படிப்பட்டவர் தற்போது டுவிட்டர் நிர்வாகத்தை கிண்டலடிக்கும் பாணியில் கண்டித்துள்ளார்.
காரணம் இதுதான்... தற்போது டுவிட்டரில் 34.3 மில்லியன் பேர் அமிதாப்பை பின் தொடர்கிறார்கள். ஆனால் இதற்கு முன் ஒருமுறை 33 மில்லியானாக இருந்த இந்த எண்ணிக்கை சடாரென 32.9 மில்லியனாக குறைந்தது.. தான் ஆக்டிவாக இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை கூடவில்லை என்றாலும் கூட, இப்படி குறைந்தது கண்டு கோபப்பட்ட அமிதாப் பச்சன், தான் டுவிட்டரை விட்டு வெளியேறப்போவதாக எச்சரித்தார்.. அதன்பின் தான் எண்ணிக்கை அதிமாகி தற்போது 34.3 மில்லியன் பேராக மாறியிருக்கிறது..
இருந்தாலும் நீண்ட நாட்களாக அதே எண்ணிக்கையையே காட்டி வருவதை கவனித்த அமிதாப், “டுவிட்டர் நிர்வாகத்தின் செயல்பாடு ஆச்சர்யம் அளிக்கிறது.. எப்படி ஒவ்வொரு பந்திலும் ஒரு சிக்சர் அடித்தாலும் கூட ஸ்கோர் போர்டை மாற்றாமல் இருப்பது போல, இவ்வளவு ஆக்டிவாக நான் செயல்பட்டாலும் கூட, டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் மாறாமலேயே இருப்பது ஆச்சர்யம் தான்” என கிண்டலடித்துள்ளார்..