சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
அரிய வகை மானைக் கொன்ற வழக்கில் கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கான் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து அவர் தனி விமானத்தில் மும்பை சென்றார். கடந்த இரண்டு நாட்களாக இது பற்றி எதுவும் கூறாமல் இருந்த சல்மான்கான் அவருடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து டிவீட் செய்திருக்கிறார்.
“கண்ணீர் நன்றி. என்னுடன் இருக்கும் அன்பாவனர்களுக்கும், எப்போதும் நம்பிக்கை இழக்காதவர்களுக்கும்...உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அந்த டிவிட்டருக்கு மட்டும் 85000 லைக்குகளும், 15 ஆயிரம் ரிடிவீட்டும், 12 ஆயிரம் கமெண்ட்டுகளும் இதுவரை கிடைத்துள்ளன. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றவருக்கு கிடைத்துள்ள வரவேற்பு இது.