தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இப்படி ஒரு ரசிகையா என அதிர்ந்து போய் இருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.. மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த நிஷி ஹரிச்சந்திரா திரிபாதி என்கிற பெண் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையாம்.. தனது தாயுடன் வசித்துவந்த இவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர் சமீபத்தில் காலமானார்.
அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கரை ஆய்வு செய்த வங்கி அதிகாரிக்கு, அவர் தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் உள்ள தனது பொருட்கள் அனைத்தும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என உயில் எழுதி வைத்திருந்தது தெரிய வர அதிர்ச்சியானாராம்.
சஞ்சய் தத்தை அழைத்து இந்த விவரத்தை சொல்ல, ரசிகையின் அன்புகண்டு நெகிழ்ந்துபோன சஞ்சய் தத், அந்த ரசிகையின் பணம், பொருட்களை எல்லாம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கே கொடுத்து விடும்படி ஏற்பாடுகளை செய்துவிட்டாராம்.