ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாகினி எனும் பாம்பு சிரீயல் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய், முதன்முறையாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். முதல்படமாக அக்ஷ்ய் குமாரின் கோல்டு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. அக்ஷ்ய் உடன் நடித்த அனுபவம் குறித்து மவுனி ராய் கூறுகையில்,
படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்ஷ்ய் குமார் அதிக ஈடுபாட்டோடு நடிப்பார். அதை பார்த்தாலே போதும் நமக்கும் அந்த ஈடுபாடு அதிகரித்து விடும். கோல்டு படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை அக்ஷ்ய் குமாரிடமிடருந்து கற்று கொண்டேன். இந்தப்படம் நல்ல அனுபவமாக இருந்தது. அதற்கு படக்குழுவினரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றதை அடிப்படையாக கொண்டு கோல்டு படம் உருவாகி உள்ளது. ரீமா காக்தி இயக்கி உள்ளார். பர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானி இணைந்து தயாரித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15-ம், சுதந்திர தினத்தில் படம் ரிலீஸாகிறது.