சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
நடிகர் ஷாரூக்கானின் பண்ணை வீட்டை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான், இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு, மகாராஷ்டிரா மாநிம், அலிபாக் கடற்கரை அருகே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. விவசாயம் செய்யப்போவதாக கூறியே இந்த நிலத்தை வாங்கியிருக்கிறார் ஷாரூக்கான். ஆனால் அதை மீறி ஆடம்பரமாக வீட்டை கட்டியுள்ளார். நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்கும் வசதியாக ஹெலிபேட் போன்றவை இங்கு அமைக்கப்பட்டுள்ளதாம்.
ஷாரூக்கான் வீதியை மீறி இந்த பண்ணை வீட்டை கட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பட்டிருக்கிறது. ஆனால், ஷாரூக் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ், வருமான வரித்துறையினர் அதிகாரிகள், ஷாரூக்கானின் பண்ணை வீட்டை முடக்கியுள்ளனர்.