'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நீரஜ் பாண்டே இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா, மனோஜ் பாஜ்பாய், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி உள்ள படம் அய்யாரி. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சல்மானின் பிக்பாஸ் 11-ல் நடந்தது. அதில், சித்தார்த் மல்கோத்ரா, போஜ்புரி சமூகத்தையும், அந்த மொழியையும் அவமதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகை நீத்து சந்திரா, சித்தார்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான மனோஜ் திவாரியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு, அவர் சித்தார்த் மீது பொதுநல வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மனோஜ் திவாரி கூறுகையில், சித்தார்த்தின் இந்த செயல் கண்டித்தக்கது, மிகவும் கீழ்த்தரமானது. அவர் மீது பொது நல வழக்கு தொடருவேன். நாட்டின் முதல் ஜனாதிபதியான டாஜேந்திர பிரசாத் போஜ்புரி மொழி பேசுவார். இந்தியாவில் உத்திர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களில், சுமார் 22 கோடி பேர் இந்த மொழியை பேசுகின்றனர். இவர்கள் அத்தனைபேரையும் சித்தார்த், அவமதித்து உள்ளார் என்று கூறியுள்ளார்.
இதனிடையே தன்னுடைய செயல் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று சித்தார்த் மல்கோத்ரா கூறியுள்ளார்.