டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்தாமல் இருந்து வந்த சொகுசு கார் மற்றும் விலை உயர்ந்த வாட் ஆகியவற்றிற்கு வரி செலுத்துமாறு பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2006 - 07 ம் நிதியாண்டு முதல் தன்னிடம் உள்ள விலையுயர்ந்த வாட்ச் மற்றும் செகுசு காருக்கு பிரியங்கா வரி கட்டாமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரியங்கா, ரூ.40 லட்சம் மதிப்பிலான எல்விஎம்எச் - டாக் வாட்ச் மற்றும் ரூ.27 லட்சம் மதிப்பிலான டொயோட்டா பிரியூஸ் கார் தனக்கு பரிசாக வந்தது. அது தனது வருமானத்தின் கீழ் வராது என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த வருமான வரித்துறை, 2006-07 நிதியாண்டு முதல் 2011 ஜனவரி வரை மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் வரி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். பிரியங்காவின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் அவருக்கு பரிசாக வழங்கிய ரூ.17.06 லட்சம் மதிப்பிலான நகைக்கும் பிரியங்கா வரி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.