மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தடைகள் பல கடந்து, கடும் பிரச்னைகளுக்கு நடுவே வருகிற ஜன., 25ம் தேதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங் நடித்துள்ள பத்மாவதி எனும் பத்மாவத் படம் ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் பத்மாவதி ரோலில் நடித்த தீபிகா படுகோனே, நமக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காண்போம்...
பத்மாவதிக்கு எழுந்துள்ள சர்ச்சை குறித்து?
நானும் சரி, மற்ற நடிகர்களும் சரி தங்களுடைய படத்திற்கு சர்ச்சை வேண்டும் என்று விரும்புவது கிடையாது. இப்படத்திற்கு எழுந்த சர்ச்சை நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை, ஆனால் ஒரு விஷயம் மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம். ரசிகர்கள் படத்தை தியேட்டரில் பார்க்கும்போது, நிச்சயம் பெருமைப்படுவார்கள்.
ஒரு பாடலில் அதிக எடையுள்ள ஆடை மற்றும் அணிகலன்கள் அணிந்து நடித்து பற்றி சொல்லுங்க?
உண்மை தான். அது ஒரு வித்தியாசமான அனுபவம் என்பதை விட சற்று கடினமாகவும் இருந்தது. இவ்வளவு எடை உள்ளது வேண்டாம் என்று நான் கோரிக்கை வைத்தேன், ஆனால் யாரும் கேட்கவில்லை, அந்தப்பாடலுக்கு அப்படி ஒரு உடை, ஆபரணங்கள் தேவைப்பட்டது. எப்படி அவ்வளவையும் அணிந்து கேமரா முன் நடனமாடினேன் என்று தெரியவில்லை. இன்றைக்கு எல்லோரும் அதைப்பற்றி தான் கேட்கிறார்கள்.
சஞ்சய் லீலா பன்சாலியின் லக்கி ஹீரோயின் நீங்கள் தானாமே?
பத்தாண்டுகளுக்கு முன்பு நான் நடித்த ஓம் சாந்தி ஓம் படமும், சஞ்சய் லீலா பன்சாலியின் சாவாரியா படமும் ஒரே நாளில் ரிலீஸானது. அப்போது நான், இனி இவரது படத்தில் நடிக்க மாட்டேன் என்று எண்ணினேன். ஆனால் இப்போது, தொடர்ந்து அவரிடன் மூன்று படங்களில் நடித்துள்ளதை எண்ணும்போது, அதிர்ஷ்டக்காரியாக நான் உணருகிறேன். சஞ்சய் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் எனக்கு அளித்த ஒவ்வொரு கேரக்டரையும் நான் ரசித்தேன். லீலா, மஸ்தானி, பத்மாவதி என மூன்று வித்தியாசமான கேரக்டர்கள், குறிப்பாக பெண்ணை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட கேரக்டர்கள்.
பத்மாவதி போன்று உங்களுக்குள் நீங்கள் உணர்ந்த விஷயங்கள் என்ன?
நிறைய விஷயங்களை உணர்ந்தேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அவரின் அறிவுத்திறன், தைரியம், வீரம் போன்றவை என்னை வெகுவாக கவர்ந்தன். என்னை பொறுத்தமட்டில், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு பத்மாவதி உள்ளார்.
சினிமாவில் 10 நிறைவு செய்துள்ளீர்கள், யாரால் இது சாத்தியம்?
முதலில் எனக்கு நானே நன்றி சொல்வேன். இந்த நிலையை அடைய மிகவும் கஷ்டப்பட்டேன். அடுத்தப்படியாக எனக்கு நல்ல ரோல்கள் கொடுத்த இயக்குநர்கள், எனக்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கடன் பட்டுள்ளேன்.
இன்றைக்கு பல புதுமுகங்கள் உங்களை அடையாளமாக கருதுகிறார்கள், இதுப்பற்றி உங்கள் கருத்து?
உண்மையாக சொல்கிறேன். இன்றைக்கு நான் சிறப்பாக உள்ளேன். இந்த நிலையை அடைய மிகவும் கஷ்டப்பட்டேன். வேறு எந்த குறுக்கு வழியையும் கையாளவில்லை. ஒருகாலத்தில் நான் வெற்றிப்பெற்ற ஹீரோயினாக வளர வேண்டும் என்று எண்ணினேன். காக்டாயில் படத்திற்கு பிறகு வெற்றி மட்டுமல்லாது, உண்மையாக, மனதிற்கும் உண்மையாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவ்வப்போது எனது சுய தகுதியை உயர்த்த வேண்டும், அப்போது தான், நான் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
இன்னும் கேள்விகள் கேட்க முன்வந்தோம், இன்னொரு சந்தர்ப்பந்தத்தில் நிறைய பேசலாம் என்று விடை பெற்றார் பத்மாவதி தீபிகா.