'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வர்ணிக்கப்படுகிறவர்கள் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும். இருவரும் இணைந்து நடித்துள்ள படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக இணைந்து நடித்த பாஜிராவ் மஸ்தானி பெரிய வெற்றி பெற்றது. அடுத்து நடித்துள்ள பத்மவாத் படம் வருகிற 26ந் தேதி வெளிவர இருக்கிறது. இருவரும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இதுகுறித்த செய்திகள் வெளியானபோது அதை இருவரும் மறுக்கவும் இல்லை. ஒப்புக் கொள்ளவும் இல்லை.
இந்த நிலையில் இருவரது திருமணத்துக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பத்மாவதி படப் பிரச்னையால் மனம் தளர்ந்து போயிருந்த தீபிகாவுக்கு ரன்வீர் சிங் தான் ஆறுதலும், தேறுதலும் அளித்துள்ளார். இதனால் காதல் இன்னும் நெருக்கமாகியிருக்கிறதாம். அண்மையில் தீபிகா படுகோனேவின் 32வது பிறந்த நாளை மாலத்தீவில் தன் செலவில் கொண்டாடினார் ரன்வீர் சிங். அப்போது அவர் தீபிகாவிற்கு விலை உயர்ந்த மோதிரம் பரிசளித்ததாக செய்திகள் வெளியானது. மாலத்தீவில் நடந்தது பிறந்தநாள் விழா மட்டுமல்ல திருமண நிச்சயதார்த்த விழாவும் தான் என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுமட்டுமல்லாது தன்வீர் சிங்கும், தீபிகாவும் இணைந்து கோவா மற்றும் லண்டனில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகு வீட்டை வாங்கி உள்ளனர். திருமணத்திற்கு பிறகு இந்த வீட்டில் தான் செட்டிலாக உள்ளனர். திருமண ஏற்பாடுகளை உறவினர்கள் தீவிரமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.