பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப். புதுமுகங்கள் நடிப்பில், இவரது இயக்கத்தில் இன்று(ஜன., 12) வெளியாகி உள்ள படம் முக்காபாஸ். முன்னதாக இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுராக், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...
முக்காபாஸ் படம் யாருடையதாவது வாழ்க்கை படமா?
வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து இப்படம் உருவாகி உள்ளது. அது ஒருவரின் வாழ்க்கை என்று சொல்ல முடியாது, இரண்டு - மூன்று பேரின் வாழ்க்கையாக இருக்கும். இதற்கு மேல் இப்படம் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. விளையாட்டில் நடக்கும் அரசியல் தலையீடு, அதில் நடக்கும் மோசடிகளை மையமாக வைத்தும் இந்த கதை இருக்கும். முழுமனதாக ஒரு நேர்மையான படத்தை இயக்கி உள்ளேன்.
அப்படின்னா உங்க படத்தில் விளையாட்டில் அரசியல் தலையீடு மற்றும் அதன் மோசடிகளை சொல்லப்போறீங்களா?
வெறுமென விளையாட்டில் நடக்கும் அரசியல் தலையீடுகளையும், அதில் நடக்கும் மோசடிகளை சொன்னால் அது ஆவணப்படம் போன்று தெரியும். இந்தப்படத்தில் இனவெறி குறித்து பேசியிருக்கிறேன். அதோடு, ஒரு அருமையான காதல் கதையையும் சொல்லியிருக்கிறேன்.
புதுமுகங்களை நடிக்க வைத்தது ஏன்?
இன்றைய சூழலில் பெரிய நடிகர்களை நாள் முழுக்க நடிக்க வைப்பது என்பது இயலாத காரியம். ஆகையால், தான் புதுமுகங்களை நடிக்க வைத்தேன். வினீத் குமார், ஜோயா ஹூசைன் இருவரிடம் நன்றாக வேலை வாங்க முடிந்தது.
பாம்பே வெல்வெட் படம் இயக்கியது தவறு என்று எண்ணியது உண்டா?
ஒருபோதும் அப்படி எண்ணியதில்லை. இயக்குநர்களுக்கு தோல்வி வரும், நானும் தோல்வி படங்களை கொடுத்தவன் தான். ஆகையால் நான் தவறு என்று எடுத்து கொள்ள மாட்டேன். ஏனென்றால், என் மூளை என்ன சொல்கிறதோ, அதை செய்கிறேன். பாம்பே வெல்வெட், பாக்ஸ் ஆபிஸில் வசூலிக்கவில்லை, காரணம் படத்தின் பட்ஜெட் அதிகம். நான் இதுவரை பெரிய பட்ஜெட் படங்களை இயக்கியது கிடையாது, ஆனால் இந்தப்படத்திற்கு அது தேவைப்பட்டது.
பாலிவுட் பார்ட்டிகளில் உங்களை காண முடிவதில்லையே?
இதுபோன்ற பார்ட்டிகளிலிருந்து விலகி இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனென்றால் அந்த சூழல் எனக்கு செட்டாகாது. யாராவது என்னை அவர்களது வீட்டிற்கு அழைத்தால் செல்வேன், ஆனால் பார்ட்டிக்கு கூப்பிட்டால் போகமாட்டேன். ஒருவேளை எப்போதாவது ஹோட்டலுக்கு செல்ல விரும்பினால் என் குடும்பத்துடன் மட்டுமே செல்வேன்.
படங்களில் நீங்கள் நடிப்பது பற்றி சொல்லுங்க?
நடிப்பதற்கு எனக்கு ஆர்வமில்லை. இருந்தாலும் அகிரா படத்தில் நடித்தேன், நிறையபேர் பாராட்டினார்கள், மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் நடிப்பது என் வேலை இல்லை.
இவ்வாறு அனுராக் காஷ்யாப் கூறினார்.