ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில், தசாவதாரம் படத்தில் நடித்துள்ளார். ஒஸ்தி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். மல்லிகா தனது காதலர் சிரிலுடன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வருகிறார். இந்திய மதிப்பின் படி மாதம் 4 லட்சத்து 60 ஆயிரம் வாடகை செலுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் மல்லிகா வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், காதலர் சிரிலை தாக்கி விட்டுச் சென்றனர். இதனால் வீட்டு உரிமையாளர் உரிய பாதுகாப்பு தர தவறிவிட்டார் என்று கூறி வாடகை செலுத்தாமல் இருந்தார் மல்லிகா. வாடகை பாக்கி ரூ.64 லட்சமானது. இதனால் வீட்டு உரிமையாளர் மல்லிகா மீது கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மல்லிகா ஷெராவத், கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் வாடகை செலுத்த முடியவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். வீட்டு உரிமையாளரின் வழக்கறிஞர், மல்லிகா ஷெராவத் கடந்த ஆண்டு நடித்த படங்களின் பட்டியலையும், அதற்கு அவர் வாங்கி சம்பளத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கியை செலுத்தாத மல்லிகா ஷெராவத்தை வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றும்படி நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டது.