தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா ஜோடியாக அறிமுகமானவர் காயத்ரி ஜெயராமன். அதன்பிறகு ஸ்ரீ, ஏப்ரல் மாதத்தில், வசீகரா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மார்க்கெட் குறைந்ததும் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பினார். ஆழ்கடலுக்குள் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங் கற்று அதில் மாஸ்டர் ஆனார். அந்தமான் தீவில் அந்த பயிற்சியாளராக பணியாற்றினார். சக பயிற்ச்சியாளரான சமித் ஸ்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார்.
பின்னர் சில காலத்திற்கு பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். கிராண்ட் மாஸ்டர், சூப்பர் குடும்பம், அச்சம் தவிர் நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருந்தவர் இப்போது நந்தினி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாகியிருக்கிறார். நித்யாராம், மாளவிகா வேல்ஸ் என்ற இளம் நடிகைகளுக்கு போட்டியாக பைரவி கேரக்டரில் நடித்து தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி வருகிறார். நல்ல கேரக்டர்கள், குறிப்பாக டைட்டில் கேரக்டர் அமைந்தால் தொடர்ந்து நடிக்க காயத்ரி ஜெயராமன் முடிவு செய்திருக்கிறார்.