கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கன்னட நடிகை ரன்யா ராவ். கடந்த வருடம் மார்ச் மூன்றாம் தேதி இவர் துபாயில் இருந்து விமானம் மூலம் தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர் பல முறை விமான பயணம் மேற்கொண்டு கிட்டத்தட்ட 102 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து கடத்தி வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவர் ஜாமீனுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும் வாய்ப்பு இருந்த நிலையில் தான் இவர் மீது காபிபோசா சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் காலம் கடந்த நிலையில் தற்போது ரன்யா ராவுக்கு காபிபோசா சட்ட விதிகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டு சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.