அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பாலிவுட், ஹாலிவுட் என பிரபலமான பிரியங்கா சோப்ரா தற்போது ராஜமவுலி இயக்கி வரும் 'வாரணாசி' தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் ஐதராபாத் வந்தடைந்தார் பிரியங்கா.
ஐதராபாத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. தினமும் 35 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை இருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஞாயிறு அன்று படப்பிடிப்பு இல்லாததால் அன்றைய தினம் தான் தங்கியுள்ள ஹோட்டல் நீச்சல் குளத்தில் தோழியுடன் ஆனந்தமாய் நீராடிய சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. நீச்சலுக்கு இடையில் மிளகாய் பொடி தூவிய மாங்காய் என அந்த ஞாயிறை அழகாக அனுபவித்தது பற்றி, “ஞாயிறு உண்மையிலேயே ஒரு ஞாயிறாக உணரப்பட்ட தருணம். மற்றும் பிற விஷயங்கள்,” குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வெடுப்பதும், நமக்குப் பிடித்த விஷயங்களை செய்வதும் ஒரு மனநிறைவான விஷயம் தான்.