தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் தர்ஷன். இவர் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்கிற கோபத்தில் அவரை கொலை செய்ததாக 2023ல் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவருடன் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 16 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் தர்ஷன் தனது உடல் நலம் ரொம்பவே பாதிக்கப்படுவதாகவும் தனிமையில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றுவதாகவும் கூறி தனக்கு ஜாமின் வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் நீதிமன்றம் ஜாமின் தர மறுத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் நவம்பர் மூன்றாம் தேதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் இறுதிக்கட்ட விசாரணை நடத்த இருப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது. அந்த சமயத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எந்த ஒருவரும் ஆப்சென்ட் ஆகக்கூடாது என்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது நீதிமன்றம். அந்த வகையில் இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றே தெரிகிறது.




