கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

டில்லி செங்கோட்டை மைதானத்தில், லவ குஷ் ராமலீலா குழு சார்பில் ஆண்டுதோறும் ராமலீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடகத்தில் மண்டோதரி கேரக்டரில் பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலிவுட்டில் ஆபாச நடிகையாக வலம் வருபவர், புனிதமான ஒரு நாடகத்தில் அதுவும் மண்டோதரி கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது பக்தர்களின் மனதை புண்படுத்தும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் ராமலீலா குழுவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், 'ராமலீலா என்பது வெறும் நாடகம் அல்ல. அது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். மண்டோதரி கதாபாத்திரம் நல்லொழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் சிறந்த மனைவிக்கான இலக்கணமாக கருதப்படுகிறது. எனவே, ஒரு நடிகையின் பொதுவாழ்க்கை அந்த கதாபாத்திரத்தின் மாண்புடன் பொருந்தியிருக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இந்த நாடகத்தில் இருந்து பூனம் பாண்டே நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.