'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் உர்பி ஜாவித், பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேற்றப்பட்டிருந்தார். எப்போதும் வித்தியாசமாக உடை அணிவதற்கு பெயர் போன உர்பி ஜாவித்தை இணையத்தில் பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம், காதல், திருமணம் குறித்து அவர் பேசுகையில், ‛எனக்கு இந்த துறையில் காட்பாதர் இல்லாததால் உடைக்காக என்னை கிண்டல் செய்கிறார்கள். நான் ஒரு முஸ்லிம் பெண். என்னை திட்டி வரும் கமெண்ட்டுகளில் பெரும்பாலானவை முஸ்லிம்களிடம் இருந்து வருகிறது. நான் இஸ்லாத்தின் பெயரை கெடுக்கிறேனாம். நான் ஒருபோதும் முஸ்லிம் பையனை திருமணம் செய்ய மாட்டேன். எனக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இல்லை.
எந்த மதத்தையும் நான் பின்பற்றவில்லை. மதத்தை திணிக்கக் கூடாது. அதுவாக பிடிக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களோ, அல்லாவோ சந்தோஷப்பட முடியாது. நான் தற்போது பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறேன். ஹிந்து மதம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கீதையில் இருந்து நல்ல விஷயத்தை எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்,' எனப் பேசியிருக்கிறார்.