தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்த வருடம் தீபாவளியை துபாயில் கொண்டாடியுள்ளார் மோகன்லால். அதுவும் அன்றைய தினம் துபாயில் தங்கியுள்ள சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்து சில மணி நேரங்கள் மகிழ்ச்சியாக செலவிட்டுள்ளார் மோகன்லால். இந்த வருடம் அவர் துபாயில் தீபாவளி கொண்டாட காரணம் இருக்கிறது.
கடந்த வருடம் தான் துபாய் டவுன்டவுனில் 51 அடுக்குகள் கொண்ட கட்டடம் ஒன்றில் புதிய பிளாட் வாங்கினார் மோகன்லால். அதனால் இந்த வருடம் தீபாவளியை தனது புதிய வீட்டில் கொண்டாடியுள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த வருடம் இதே நவம்பரில் தான் புற்றுநோய் சிகிச்சை பெற்று, துபாய் திரும்பி ஓய்வெடுத்து வந்த நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து நலம் விசாரித்தார் மோகன்லால். அதனால் இந்தமுறையும் தீபாவளிக்காக துபாய் சென்றபோது சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் மோகன்லால்.