ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தின் உச்ச நட்சத்திரத்தின் இரண்டாவது மகளுக்கும், பெரும் தொழிலதிபர் மற்றும் வளரும் நடிகர் ஒருவருக்கும் இடையிலான மறுமணம் பற்றித்தான் நேற்று பல ஊடகங்களில் செய்தி. ஆனால், அது அதிகாரப்பூர்வ செய்தி அல்ல. இதுவரையில் உச்ச நட்சத்திரம் தரப்பிலிருந்தும் அதற்கு மறுப்பு வராததால் அந்த மறுமணம் பற்றிய செய்திகள் உண்மையாகத்தான் இருக்கும்.
இந்த மறுமணத்தின் பின்னணியில் ஒரு கலவரமான உண்மைகள் இருக்கிறது. உச்ச நட்சத்திரத்தின் மகள் விவாகரத்து பெற்றவர். அவரைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நடிகரும் விவகாரத்து வாங்கியவர். அவருடைய முன்னாள் மனைவி, முன்னாள் பத்திரிகை அதிபர் ஒருவரின் பேத்தியாம். அந்த பேத்தி, தற்போது வேறு ஒரு இளம் தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளாராம். அந்த இளம் தொழிலதிபருக்கும், மூன்றெழுத்து நடிகைக்கும் திருமணம் நடக்க இருந்து நிச்சயதார்த்தம் வரை சென்று, பின்னர் ரத்தானது.
உச்சநட்சத்திரத்தின் மகளின் முன்னாள் கணவர் ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவிட்டது கூடுதல் தகவல்.
பெரிய இடத்தில் காதலும், விவாகரத்தும், மறுமணமும் சர்வசாதாரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம். இது பற்றித்தான் இப்போது ஹாட்டாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்களாம்.