ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி பாதையை உருவாக்கிக் கொள்ள நினைப்பவர்கள் ஓரளவிற்கு முன்னேறிவிடுவார்கள். ஆனால், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு அவர்களைப் போலவே தாங்களும் வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தடுமாறித் தேங்கிவிடுவார்கள்.
ஆனந்தமாய் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தாலும் அகலக் கால் வைத்ததால் மிகப் பெரும் கடனாளியாகி, தன் சொந்த அலுவலகத்தைக் கூடப் பறிகொடுத்தவர் அந்த சாமி இயக்குனர். அவருக்கும் சங்கத் தலைவர் நடிகருக்கும் சண்டை முடிந்து ஒரு வழியாக இரண்டாவது கோழி படத்தை முடித்துவிட்டார்கள்.
வர உள்ள படங்களில் இந்தப் படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நிஜம். படத்தின் வெளியீட்டுத் தேதியையும் குறித்துவிட்டார்கள். ஆனாலும், படம் திட்டமிட்டபடி வருமா என்பது சங்கத் தலைவருக்கும் மேல் உள்ள பஞ்சாயத்து ஆட்களிடம்தான் உள்ளதாம். சாமி இயக்குனர் அவருடைய முந்தைய பல கோடி பாக்கிப் பணத்தை செட்டில் செய்தால் மட்டுமே இரண்டாவது கோழி சரியான சமயத்தில் வரும் என்கிறார்கள்.
சங்கத் தலைவரா, பஞ்சாயத்து ஆட்களா என்ற பஞ்சாயத்து விரைவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.