பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய சொந்த முயற்சியில் இந்த அளவிற்கு வளர்ந்த ஒரு நடிகர் சிவபுத்திரன். திரையுலகில் நிதானமாக அடியெடுத்து வைத்து படிப்படியான வெற்றிகளைப் பெற்று இன்று உயர்ந்த ஐந்து நட்சத்திரங்களில் ஒருவராகவும் முன்னேறியிருக்கிறார். அவருடைய வளர்ச்சி பலருக்குப் பொறாமையை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள்.
குறிப்பாக சில வாரிசு நடிகர்களுக்கு சிவபுத்திரனின் இந்த அரசு வளர்ச்சியைக் கண்டு பொறாமை அதிகரித்துள்ளதாம். தாங்கள் இத்தனை வருடங்களாக திரையுலகத்தில் இருக்கிறோம், நமக்குக் கிடைக்காத வெற்றி அவருக்கு கிடைக்கிறதே என்ற மன உளைச்சலில் சிலபல வேலைகளை செய்வதாகச் சொல்கிறார்கள்.
அதனால் தான் சமீபத்தில் வந்த வெளிநாட்டு ராஜா படத்திற்கெதிராக பலவிதமான மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் உலகவிட்டார்களாம். அதில் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களின் பங்கும் இருக்கிறது என்கிறார்கள். ஒரு பக்கம் இப்படிப்பட்ட எதிர்ப்புகளை மீறி சிவபுத்திரன் வளர்ந்தாலும், அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சில திரையுலக நலம் விரும்பிகள் பேசி வருகிறார்கள்.