டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் சில சமயங்களில் சில நிகழ்வுகள் முரணாக அமையும். விரைவில் ஆறுச்சாமியாக மீண்டும் தன்னுடைய அவதாரத்தை வெளிப்படுத்த இருக்கும் நாயகன் சிசிடிவி பற்றிய விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அதை சென்னை காவல் துறைதான் முன்னெடுத்துள்ளது. இது பற்றிய தகவல் வந்ததும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.
சில வாரங்களுக்கு முன்பு அந்த நாயகனின் வாரிசு இரவு நேரத்தில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று ஒரு விபத்தை ஏற்படுத்தினார். மீடியாக்களில் அது பற்றிய செய்தி பரபரப்பாக வெளிவந்தது. அதன் பின் அந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது. ஆனால், சிசிடிவி விழிப்புணர்வு விளம்பரத்தில் நாயகன் நடித்ததையும், அவருடைய மகன் விபத்து ஏற்படுத்தியதையும் இணைத்து விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பு நாயகன் அவருடைய மகனுக்கு அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு கொடுக்கட்டும் என்கிறார்கள்.