சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு(2018) தமிழ் சினிமா சந்தித்த பிரச்சினைகள் ஏராளம் அவற்றில் சிலவற்றை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.
55 நாள் ஸ்டிரைக்
டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திரையுலகமே 55 நாள் வேலை நிறுத்தம் செய்தது. பணிகள் அனைத்தும் முடங்கின. புதிய படங்கள் எதுவும் வௌியாகவில்லை. தியேட்டர்களும் மூடப்பட்டது. அரசு தலையீட்டுக்கு பிறகு பிரச்சினையை முடிவுக்கு வந்தது. 55நாள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வருவாய் பாதிக்கப்பட்டது.
ஆண்டாள் தொடங்கி மீ டூ வரை வைரமுத்து சர்ச்சை
பாடலாசியர் வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடந்தது. அது முடிந்த சில மாதங்களில் பாடகி சின்மயி அவர் மீது மீடூவில் பாலியல் புகார் கூறி அதிரவைத்தார். இந்த ஆண்டு இறுதிவரை வைரமுத்து இந்த பிரச்சினைகளில் இருந்து மீள முடியாமல் தவித்தார்.
அதிர வைத்த மீ டூ
வைரமுத்துவை தொடர்ந்து, நடிகர் அர்ஜூன், ராகவா லாரன்ஸ், தியாகராஜன், ராதாரவி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீடு வின் மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்கள். தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசில் பிடித்துக் கொடுத்தார் அமலாபால், இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியில் புகார் கூறினார். பெண் இயக்குனர் லீனா மணிமேகலையும் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறினார். நடிகை மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகி அனன்யா பிரசாத் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
நடிகைகள் தற்கொலை
அறிமுக நடிகை ரியாமிகா, சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் திரையுலக போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் திரையுலகம் திரண்டு மவுனப் போராட்டம் நடத்தியது.
சர்ச்சைகளில் சிக்கிய படங்கள்
ஆதார் அட்டையை விமர்சிப்பதாக இரும்புத்திரையும், அரசு நலத்திட்டங்களை விமர்சிப்பதாக சர்கார் படமும் சட்டம், மற்றும் அரசியல் பிரச்சினைகளை சந்தித்தது.
விஸ்வரூபம் எடுத்த சர்கார் பிரச்னை
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தின் போஸ்டர் வௌியானபோதே புகைப்பிடித்த சர்ச்சையில் சிக்கியது. தொடர்ந்து, கதை திருட்டு, அரசை விமர்சித்தல் போன்ற பிரச்னைகள் ஏழுந்தன. கதை திருட்டில் நியாயமாக நடந்த பாக்யராஜ், எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப மீண்டும் பதவியேற்றார். முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காலாவும், கர்நாடகாவும்...
காவிரி பிரச்சினை காரணமாக காலா படத்தை கர்நாடகத்தில் திரையிட கர்நாடக மாநில திரைப்பட வர்த்தகசபை தடை விதித்தது. படத்தின் விநியோகஸ்தர் வீடு, அலுவலகம் தாக்கப்பட்டது.
போதையும், கார் விபத்தும்...
போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் ஜெய், நடிகை காயத்ரி ரகுராம் மீது அபராதம் விதிக்கப்பட்டது.
இயக்குநர்கள் மீது வழக்கு
வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. மன்சூரலிகான், கவுதமன் கைது செய்யப்பட்டனர்.
செயல்படாமல் போன ஒழுங்கு முறை குழு
படங்கள் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒழுங்குமுறை கொண்டு வந்தது. வாரத்திற்கு நான்கு படங்கள் தான் ரிலீஸ் ஆக வேண்டும், சங்க அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அதனை கடைசி வரை முறையாக செயல்படுத்த முடியவில்லை.
தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஆண்டு முழுவதும் பனிப்போர் நடந்தது.
வாகனங்களை புதுச்சேரியலில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால், நடிகர்கள் பகத் பாசில், சுரேஷ் கோபி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
ராஜாவும் ராயல்டியும்
ராயல்டி தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் முறையிட, பல தயாரிப்பாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு பிரிவுனர், தி.நகர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதை உடைக்க முற்பட்ட விஷால் கைது செய்யப்பட்டார். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சீல வைக்கப்பட்டது. பின்னர் கோர்ட் வரை பிரச்னை செல்ல, சீல் அகற்றப்ட்டது.