வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராகவும், நாடக உலகின் மன்னனாகவும் திகழ்ந்தவர் எம்.ஆர்.ராதா. அவரின் நினைவு நாள் இன்று. அவரைப்பற்றிய சில நினைவலைகள்....
1. மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம் தான் எம்.ஆர்.ராதா. அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர்.
2. பள்ளியில் படிக்க மனம் இல்லை. நான் ஓர் அநாதை என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள், கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம் .
3. ராதா நடித்த முதல் படம் ராஜசேகரன் (1937), கடைசிப் படம் பஞ்சாமிர்தம் (1979), சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான். 5000க்கும் மேற்பட்ட நாடகங்ளில் நடித்திருக்கிறார்.
4. ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 முறை அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 முறையும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 முறையும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அவருக்கு பிறகு அவரது வாரிசுகள் தொடர்ந்து நடத்தினார்கள்.
5. நாடகம் நடந்து கொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை. அந்தப் பொருட்களை மறுநாள் கண்காட்சியாக வைப்பார். நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள் என்று அதில் எழுதி வைப்பார்.
6. எம்.ஜி.ஆரை, ராமச்சந்திரா என்றும், சிவாஜியை கணேசா என்று பெயர் சொல்லி அழைப்பவர் இவர் மட்டும் தான். மற்ற நடிகர்களை ஒருமையில் தான் குறிப்பிடுவார்.
7. இவரது நாடகங்களை தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்.
8. எம்.ஜி.ஆரை, அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்ட வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்தார்.
9. எவ்வளவு நீளமான வசனங்களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார்.
10. ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா உள்பட 118 படங்கள் நடித்த ராதா, 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்.