சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ்த் திரையுலகத்தில் நேற்று ஆகஸ்ட் 3ம் தேதி ஒரே நாளில் 10 படங்கள் வெளியானது, இந்திய அளவில் பேசப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது. எப்படி ஒரே நாளில் 10 படங்கள் வந்தது என்ற காரணம் தெரியாமல் பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்று சங்கம்
மற்ற மொழிகளில் தயாரிப்பாளர் சங்கம் என்பது ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், தமிழில் மட்டும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர், கில்டு என மூன்று சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்ப் படங்களை எடுக்க விரும்பும் ஒரு தயாரிப்பாளர் இந்த மூன்று சங்கங்களில் ஏதாவது ஒரு சங்கத்தில் உறுப்பினர் ஆகி படங்களைத் தயாரிக்க முடியும்.
கில்டில் 5
பெரும்பாலான சிறிய படங்கள் கில்டு சங்கம் மூலம் பதிவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அப்படித்தான் நேற்று வெளியான 10 படங்களில் “போயா, அரளி, நாடோடி கனவு, உப்பு புளி காரம், காட்டுப் பய சார் இந்த காளி” ஆகிய 5 படங்கள் கில்டு சங்கத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்டு வெளிவந்த படங்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 5
இந்தப் படங்களின் நேற்றைய வெளியீட்டிற்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தப் படங்களின் வெளியீட்டை தயாரிப்பாளர் சங்கத்தினர் எந்த விதத்திலும் கட்டுப்படுத்துவதில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட “கஜினிகாந்த், கடல் குதிரைகள், எங்க காட்டுல மழை, மணியார் குடும்பம், கடிகார மனிதர்கள்” ஆகிய படங்களுக்குத்தான் தயாரிப்பாளர் சங்கத்தினர் அனுமதி அளித்துள்ளார்கள்.
திரைப்படங்களைப் பொறுத்தவரையில் தியேட்டர் வெளியீடு நடந்தால் மட்டுமே அந்தப் படத்திற்கு சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, மற்ற உரிமைகள் மூலம் வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதனால், குறைந்தபட்சமாக 20 முதல் 50 தியேட்டர்கள் வரை தங்களது படங்களை வெளியிட சம்பந்தப்ட்ட தயாரிப்பாளர்களே சம்மதித்து விடுகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு சில பல லட்சங்களும் கிடைத்து விடுவது அவர்களுடைய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சென்சார் ஆகி முடங்கி கிடந்த படங்கள்
நேற்று வெளியான 10 படங்களில் ஐந்தாறு படங்கள், 2013, 2014, 2016 ஆகிய வருடங்களில் சென்சார் செய்யப்பட்ட படங்கள். ஏற்கெனவே அந்தப் படங்கள் சில முறை வெளியிட முயற்சிகள் நடந்து நடக்காமல் போனது. அப்படிப்பட்ட படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் சில தியேட்டர்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்களாம்.
ஒற்றுமை தேவை
தயாரிப்பாளர் சங்கத்தைப் பொறுத்தவரையில் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குக் குழுவினர், அவர்களது சங்க உறுப்பினர்களிடம் அவர்களது படங்களை வெளியிட விரும்பும் மூன்று தேதிகளைக் கேட்டு வாங்கி, அதில் ஒரு தேதியைத் தேர்வு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்த பிறகே, அவர்களுக்கான தேதியை ஒதுக்குகிறார்களாம். இந்த நடைமுறைக்கு அனைத்துத் தயாரிப்பாளர்களுமே ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.
ஆனால், கில்டு சங்கத்தில் பதிவு செய்த சில தயாரிப்பாளர்கள் சம்பந்தமே இல்லாமல், அவர்கள் சாராத தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி குறை கூறி வருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
மற்ற மொழிகளிப் போல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென ஒரே சங்கமாக தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் வர வாய்ப்பில்லை என சில மூத்த தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்படி எதையும் நடக்க விடாமல் சிலர் சதி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.