ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆடை, அதோ அந்த பறவை போல, போன்ற படங்களில் நடித்து வருகிறார், அமலா பால். தான் திரையுலக அனுபவம் குறித்தும், தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் 'மீ டூ' குறித்தும் நம்மிடையே அவர் பேசியதாவது:
ராட்சசன் படத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
அந்த படம் வெளியாகும் போது, நாங்கள் ரொம்ப டென்ஷனாகவே இருந்தோம். நானும், விஷ்ணு விஷாலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக துபாயில் இருந்தோம். படத்தின் வெற்றிக்கு, பத்திரிகையாளர்களும், ரசிகர்களுமே காரணம். படம் வெளியானதிலிருந்தே, சமூகவலைதளங்களில், நல்ல விதமான செய்திகள் வெளிவந்தபட இருந்தன. படத்தின் வெற்றிக்கு நல்ல கதை இருந்தால் போதும் என உணர்த்திய ரசிகர்களுக்கு, இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.
அடுத்து நடிக்க உள்ள படங்கள்?
ஆடை, அதோ அந்த பறவை போல படங்களில் நடித்து வருகிறேன். ஒரு ஹிந்தி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.தமிழ் திரையுலகை பற்றி சில வார்த்தைகள்... எனக்கு தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழி தான், என்னை வரவேற்றது. ரசிகர்கள் மற்றும் என்னை நம்பிய திரையுலகினரால் தான், இந்தளவு என்னால் வளர முடிந்துள்ளது.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது குறித்து?
ஆடை, அதோ அந்த பறவை போல படங்கள், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தான். இதுவரை நடித்த படங்களை பார்க்கும் போது, நிறைய படங்கள் வித்தியாசமான ரோலில் நடித்துள்ளேன். வெறும் நடிகையாக மட்டுமல்லாமல், வித்தியாசமான ரோலில் நடித்தால், பல ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியும். கேமரா முன், சும்மா வந்து போகும் நடிகையாக அல்லாமல், நல்ல கதையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
மீ டூ வை பற்றி?
இந்த விவகாரத்தில், முதலில் நான் தான் வெளிப்படையாக பேசினேன். இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் நான் தான், முதலில், 'டுவிட்' செய்தேன். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.எல்லா துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், மீ டூ உருவாகியிருப்பது நல்ல விஷயம் தான். இந்த விவகாரம், இன்னும் விஸ்வரூபம் எடுக்கும்; இதை பெண்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.