Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

இன்றைய காதலில் நம்பகத்தன்மை இல்லை! அதர்வா

29 ஜூன், 2018 - 06:33 IST
எழுத்தின் அளவு:
no-credibility-in-todays-love

பாணா காத்தாடி படம் வாயிலாக, நாயகனாக தமிழ் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தவர், அதர்வா. தற்போது, செம போத ஆகாதே படத்தின் மூலம், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். திரையுலக பயணம் குறித்து அவருடன் பேசியதிலிருந்து...


செம போத ஆகாதே படம் பற்றி?


இயக்குனர் பத்ரி, இந்த படத்தின், 'ஒன்லைனை' மட்டுமே என்னிடம் கூறினார்; புதிதாக இருந்தது. உடனே செய்யலாம் என முடிவு எடுத்தோம். என் முதல் படத்தை பத்ரி தான் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கூட, புகை பிடிக்க மாட்டேன். மதுவால் ஏற்படும் விளைவை இந்தப் படத்தில் சொல்லியுள்ளோம்.


சினிமாவை எந்தளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்?


நான் இன்னும், 100 படம் செய்தாலும், சினிமா தொடர்பான அனைத்தையும் கற்க முடியாது. பாணா காத்தாடி படத்தில் நடித்தபோது, சினிமா வேறு மாதிரி இருந்தது; இப்போது வேறு மாதிரி உள்ளது. டிஜிட்டல் பிளாட்பாரம் அதிகரித்து விட்டது. சினிமா வளர்ந்துகிட்டே இருக்கு. நாங்களும், 'அப்டேட்' ஆகிட்டே இருக்கிறோம்.


மற்ற நடிகர்களை வைத்து, படம் தயாரிப்பீர்களா?


கண்டிப்பாக அந்த ஆசை உள்ளது. தயாரிப்பு பணியை மேலும் அதிகரிக்க வேண்டும். மற்ற நடிகர்களையும் வைத்து படம் தயாரிக்க வேண்டும்.


பிரமித்து பார்க்கிற நாயகன் யார்?


தினமும் யாராவது ஒரு நடிகர் பிரமிக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார். குறிப்பாக, விஜய் சேதுபதி வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.


கல்யாணம் எப்போது?


எனக்கு திருமணத்திற்கான நேரம், இன்னும் வரவில்லை. 'கிசுகிசு' பற்றியெல்லாம் அம்மா கவலைப்பட மாட்டார். அது குறித்து வீட்டில் யாரும் பேசியதே இல்லை. எந்த விஷயத்திலும் என்னை நிர்ப்பந்திப்பதில்லை.


தோழியர் உள்ளனரா?


நான் நடித்த எல்லா நாயகியரும் எனக்கு முக்கியம் தான். மேகா, ஹன்சிகா, ப்ரியா ஆனந்த் எல்லாரும், நல்ல தோழியர் தான்.


அப்பா நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்கும் எண்ணம் உண்டா?


அப்பா நடித்த, இதயம், பொற்காலம், இரணியன் போன்ற படங்களை எல்லாம், நான் செய்ய முடியுமா என தெரியாது. அவரது படம், அவருடைய படம் தான். கடந்த சில ஆண்டுகளாக, எனக்கு பிடித்த படத்தை என்னால் செய்ய முடிவது சந்தோஷமாக உள்ளது; அது போதும்.


சினிமாவில், முரளி காதல் - அதர்வா காதல் எப்படி?


அப்பா நடித்த படங்களை சினிமாவாக பார்க்கும் போது, இப்போது கூட நன்றாக இருக்கும். ஆனால், ரியாலிட்டி என வரும் போது, அப்போ இருந்த காதல், இப்போது இல்லை எனலாம். இந்த தலைமுறை மாறி விட்டது. பெண்களிடம் பேசுவது ரொம்ப சுலபமாகி விட்டது. அணுகுமுறை மாறி விட்டது. ஒருதலை காதல் குறைந்து விட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in