டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடித்த தன்ஷிகா, அதன்பின் சில படங்களில் நடித்தாலும் ரஜினியுடன் நடித்த கபாலி தான், அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதன்பின் விழித்திரு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர், இந்தாண்டின் முதல் வெளியீடாக காத்தாடி படம் மூலம் தன் கணக்கை துவக்குகிறார். கல்யாண் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் தன்ஷிகாவுடன் அபிஷேக் கார்த்திக், டேனியல், ஜான் விஜய், சம்பத் ராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காத்தாடி அனுபவம் குறித்து நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...
காத்தாடி படம் பற்றி சொல்லுங்க?
இது ஒரு பயணம் தொடர்பான கதை. மூன்று நண்பர்கள் ஓரிடத்தில் இணைவோம், அவர்களுக்கு இடையேயான ஒரு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது மாதிரியான படம். நிறைய காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்ஷ்ன் நிறைந்த காமெடி கலந்த த்ரில்லர் படம்.
உங்க ரோல் பற்றி சொல்லுங்க?
மிகவும் ஏழ்மையான பொண்ணாக நடித்திருக்கிறேன். ஏழ்மை நிலையில் இருந்து எப்படி போராடி வருகிறேன். நான் செய்யும் ஒரு தவறு எப்படி நல்லதாக மாறுகிறது என்பது மாதிரியான ரோல். படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறேன்.
படத்தில் உங்களுக்கு ஜோடி யாரு?
ஜோடி என்று யாரும் கிடையாது. அபிஷேக் கார்த்திக் உள்ளிட்ட இன்னும் சிலர் என்னோடு நடித்திருக்கிறார்கள். எல்லோரும் நண்பர்கள் தான். படத்தில் எனக்கு முக்கியமான ரோல்.
படத்தில் என்ன ஹைலைட்?
எனக்கு ஒரு அண்ணன் இருப்பார். ஒருக்கட்டத்தில் அவர் என்னை தவறான இடத்தில் தள்ளப்பார்க்க, அவரிடமிருந்து தப்பித்து தனியாக வாழ்ந்து ஜெயிக்கிற மாதிரியான வேடம். இது ஒரு புது அனுபவமாக இருந்தது.
விழித்திரு பற்றி.?
பல தடைகளை கடந்து, ஏகப்பட்ட ரிலீஸ் தேதி மாறி வெளிவந்த படம் அது. நிறைய கஷ்டப்பட்டு உழைத்த அந்தப்படம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக போய் இருக்கலாம். அந்த வருத்தம் இப்போதும் இருக்கு.
கதை தேர்வு?
நான் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் உண்மையாக இருக்க விரும்புவேன். எல்லாவிதமான ரோலும் என்னால் பண்ண முடியும். கதையில் எனக்கான கேரக்டர் எப்படி என்று பார்த்து நடிப்பேன். தற்போது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறேன். சண்டைக்காட்சிகளில் கூட டூப் போடாமல் நடிக்கிறேன்.
கபாலிக்கு பிறகு தன்ஷிகா சின்ன படத்தில் நடிக்க மாட்டாரா?
நிறைய பேர் அப்படி தவறாக நினைக்கிறார்கள். நான் அதிகமாக சின்ன படங்களில் தான் நடித்து வருகிறேன். என்னை பொறுத்தமட்டில் கதை தான் முக்கியம். பெரிய படங்களின் வாய்ப்பு வந்தும், கதை பிடிக்காமல் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்.
சினிமாவில் கற்றுக்கொண்டது?
17 வயதில் சினிமாவிற்கு வந்தேன். அந்தவகையில் நான் இந்த துறைக்கு வந்து 7 ஆண்டுகளாகிவிட்டது. நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு பாடம். சினிமாவில் தினமும் கற்றுக் கொண்டு தான் உள்ளேன்.
உங்களுக்கு கிடைத்த அடையாளத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறீர்களா?
கபாலி படம் எனக்கு நல்லதோரு அடையாளத்தை தந்து மக்களிடம் கொண்டு சென்றது. இன்னும் நல்ல நல்ல ரோல்கள் பண்ண ஆசை உள்ளது. அதற்கான கதைகள் அமைய வேண்டும். எனக்கான அடையாளத்தை சரியாக பயன்படுத்த விரும்புகிறேன்.
எந்த இயக்குநரின் படத்தில் நடிக்க ஆசை?
மணிரத்னம் மற்றும் கவுதம் மேனன்.
திருமணம்.?
நிறைய படங்களில் நடித்து வருகிறேன். திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை. எப்போது நடக்குமோ, அப்போது நடக்கும்.