டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அப்பாவின் அரசியல் பயணம், திரையுலகில், தன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், ஸ்ருதி ஹாசன். அவருடன் ஒரு சந்திப்பு:
* அதிகம் நடிப்பது இல்லையே; ஏன்?
வழக்கமான கதைகளில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை. என்னுடைய கேரக்டர் எனக்கு பிடிக்க வேண்டும். அதனால், எந்த அவசரமும் காட்டாமல், நம்பர் ரேசில் ஓடாமல், என்னை தயார் படுத்த, அவகாசம் தேவைப்பட்டது; அவ்ளோ தான்.
* நல்ல கதைகள் வரவில்லையா?
என்னை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் குழந்தை மாதிரி, அது வளர்வதில் சிரமம் இருக்கும். இப்போது நல்ல கதைகள் வந்து கொண்டு இருக்கிறது. சிலநேரம் கதை நன்றாக இருக்கும், படம் சரியாக வராது. சிலநேரம் கதை சாதாரணமாக இருக்கும், படம் சிறப்பாக வந்திருக்கும். இப்படி பல விஷயங்களை யோசித்து தான் முடிவு செய்கிறேன். கதை பிடித்தால் மட்டுமே படம் பண்ணுவேன்.
* இப்போது நடிக்க உள்ள படங்கள் ?
மிக விரைவில் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். தமிழில் சில கதைகள் கேட்டுள்ளேன்.
* கமல் மகள் என்பதில், பிளஸ் அதிகமா, மைனஸ் அதிகமா?
ஹாசன் என்ற பெயர், அப்பா மூலமாக வந்தது. ஆனால், சினிமா தொடர்பான விஷயங்களில், நான் தனியாகத் தான் முடிவு எடுக்கிறேன்.
* சினிமாவில் ஹீரோக்களுக்கு தான் அதிக முக்கியத்துவமா.?
இப்போது அப்படி தான் பல மொழிகளில் வருகிறது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளை மையமாக வைத்து படங்கள் வந்தன. அது இப்போது திரும்புவது போன்று உணருகிறேன்.
* இசையில் ஆர்வம் உள்ள நீங்கள் ஏன் தொடர்ந்து படங்களுக்கு இசையமைப்பது இல்லை?
உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு இசை அமைத்தேன். அதிகநேரம் ஒதுக்கினேன். கொஞ்சம் சிரமமான வேலை. என்னால் அதிகநேரம் ஒதுக்க முடியாது. ஆல்பம் செய்ய தயாராக உள்ளேன், ஒரு சில பாடல்கள் என்றால் ஓகே.
* சபாஷ் நாயுடு படப்பிடிப்பு தளம் குறித்து?
ஷூட்டிங் போனால், நட்பு, உறவு என, எல்லாவற்றையும் மறந்து விடுவேன். வேலையில் மட்டுமே குறியாக இருப்பேன். படப்பிடிப்பு முடிந்ததும், அப்பா, தங்கையுடன், ஜாலியாக அரட்டை அடிப்பேன். வேலை வேறு, குடும்பம் வேறு என்பதில், மூவருமே தெளிவாக இருக்கோம். இன்னும் என் பகுதி மட்டும் கொஞ்சம் படமாக்கப்பட இருக்கிறது. எந்த வயதினரும் பார்க்க கூடிய படம். அப்பாவுடன் வேலை பார்த்தது ஒரு நல்ல அனுபவம், நிறைய கற்று கொண்டேன்.
* அக்ஷ்ராவும், நீங்களும் சேர்ந்து நடிப்பீர்களா?
சில கதைகள் வந்தன. ஆனால் அது சரியாக அமையவில்லை. நல்ல கதைகள் வந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்போம்.
* விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிப்பீர்களா?
கபடி, எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு. பள்ளியில் படிக்கும்போது கபடி விளையாடி இருக்கேன். கபடி வீராங்கனையாக, ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
* சமூகத்துக்கு முக்கிய தேவை என்ன?
ஆண், பெண் என, யாராக இருந்தாலும், கல்வி ரொம்ப முக்கியம். ஒரு பெண் படிப்பறிவு பெற்றால், அவளால் சொந்த காலில் நிற்க முடியும். குடும்பத்தை காப்பாற்ற முடியும். அதனால், பெண் குழந்தைகளுக்கான கல்வி, ரொம்பமுக்கியம்.
* தனிமை வாழ்க்கை பிடித்திருக்கிறதா?
சின்ன வயதில் இருந்தே அப்படி வாழ பழக்கப்பட்டேன். இப்போது வளர வளர இன்னும் அதிக தனிமை தேவைப்படுகிறது. முன்பு வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருந்தேன். அதனால் நிறையபேர் என்னை சுற்றி இருப்பாங்க. மற்றபடி தனிமை என்னை பாதித்து இல்லை.
* சங்கமித்ரா படத்திற்காக வாள் சண்டை போன்ற பயிற்சி எடுத்தீர்கள், அதுபற்றி?
அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன். நான் மேற்கொண்ட பயற்சி இப்போது பலன் அளிக்கவில்லை என்றாலும் எப்போதாவது எனக்கு பயன்படும்.
* அப்பாவின் அரசியல் பயணத்துக்கு உங்கள் ஆதரவு உண்டா?
அப்பாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே சமூக பொறுப்புகள் நிறையவே உண்டு. அவர் படங்களை பார்த்தாலே, அது தெரியும். படங்களில் சொல்லியதை, இப்போது மக்களுக்கு நேரில் சொல்ல போகிறார். அவரது இந்த முடிவு, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது அரசியல் பயணத்துக்கு, என்னுடைய ஆதரவு உண்டு. மற்றபடி, அரசியலில், எனக்கு அனுபவமில்லை. அதைப் பற்றி பேசவும் விரும்பவில்லை.
* ரஜினி, கமல் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வருவதால், மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கும்?
இப்படி எல்லாம் கேட்டால், எனக்கு பதில் சொல்லத் தெரியாது. என் அப்பாவுக்கு, ஆதரவாக இருப்பேன்; அவ்வளவு தான்.
* சமீபத்தில், பட்டுப் புடவையுடன் இருக்கும் புகைப்படங்கள், ஊடகங்களில் அதிகமாக வந்ததே?
எனக்கு, எந்த விஷயத்தையும் மறைத்து வைக்கும் பழக்கம் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. என் மனதுக்கு பிடித்தவர் அல்லது நட்பு வட்டாரம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், அதைப்பற்றி, இப்போது பேச விரும்பவில்லை. கண்டிப்பாக, எனக்கு நடக்கப் போவது காதல் திருமணம் தான்; ஆனால், அதைப் பார்ப்பதற்கு, நீங்கள் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.