'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்டார் பிளஸ் டி.வியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட பேண்டசி சீரியல் நஸார். இதில் பிரபல பாலிவுட் நடிகை அந்தரா பிஸ்வாஸ், ரித்து சவுத்ரி, நியாதி பட்டாணி, ஹரிஷ் ராஜ்புத், சமிதா பன்சாலி உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுவரை 38 எபிசோட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
தற்போது இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் அதே கண்கள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற 8ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
200 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் தீய சக்தியான மோகினி, தன்னை இளமையாக வைத்துக் கொள்ள மனிதர்களை கொன்று ரத்தம் குடிக்கிறாள். தன் காம இச்சைக்காக மிருதுள் என்பவரை திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்கு அனஸ், காஜல் என இரண்டு குழந்தைகளும் பிறக்கிறது. மோகினிக்குள் இருக்கும் தீய சக்தி மீண்டும் எழுதுகிறது. கணவனை கொலை செய்து ரத்தம் குடிக்கிறாள்.
அவள் தன் குழந்தைகளையும் கொல்ல நினைக்கிறாள். இதனை திவ்யா என்பவர் கண்டுபிடித்து குழந்தைகளை காப்பாற்றி வளர்கிறாள். குழந்தைகளில் ஒருவரான அனஸ் இளைஞன் ஆனதும் அசாதாரண சக்கி கிடைக்கிறது. தன் மகனை காண மோகினி மீண்டும் வருகிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.